-

பாழடைந்த வீடு..!

{[['']]}
என் அவல நிலையை
சொல்லி அழ
எனக்கு நாவில்லையே
எனக்குள் ஏன் இந்த
மௌனக்கண்ணீர்
 
இறைவா நான் செய்த
பாவம் தான் என்ன
 
வாழையடி வாழையாயாக
எனக்குள் ராஐவாழ்கை
வாழ்ந்தவர்கள் எங்கே
 
சோபை இழந்த நிலையில்
என்னை ஊனமாக்கி
இடிபாட்டுக்குள் என்னை
நிறுத்தி விட்டனரே
 
வாழ்வின் சுவை ருசிக்கும் வரை
எனக்குள் உண்டு
உறங்கி வாழ்ந்தவர்கள்
கண்காணாத இடம் சென்றனரே
 
நான் வேண்டும் சுகம்
பூட்டிக் கிடக்கும்
கதவுக்குள் கிடைப்பதில்
அர்தமில்லையே
 
அரவங்களும் éச்சிகளின்
வாழ்விடமாகவே நான் இப்போது
இருக்கிறேன்
 
இந்த இன்னல் எனக்கு புதிதென்பதால்
இதயம் கரைகிகிறது
 
என்னை பதிதாக உருவாக்கியவர்
மூன்று தலைமுறைக்கு முன்னவர்
 
அவரோடு தொடர்ந்து வாழ்ந்தவர்களை
இமைகளின் ஓரத்தில் சுமக்கிறேன்
 
மீண்டும் அவர்களோடு
உயிர்க் கருவாய் அவர்களை
எனக்குள் சுமப்பதையே
விரும்பகிறேன்
 
இன் வெளிநாட்டில் வாழ்பவர்கள்
நாளை வாழ்விடம் தேடி வருவார்களேயானால்
நான் மீண்டும் மலர்ச்சி பெறுவேன்
Share this poem :

No comments:

Post a Comment

 
Copyright © 2011. Tamil Poems - All Rights Reserved
Published by Eelanila.com