-

உதட்டுச் சாயம் தெரியாது.

{[['']]}


உதட்டுச் சாயம் தெரியாது.
வளயல் குலுக்கத் தெரியாது.
ஜிமிக்கி போட தெரியாது.
மூக்குத்தியும் கிடையாது.
துப்பாக்கிதான் அவளோட ஆயுதம்..
மஞ்சல் பூசத் தெரியாது.
மயக்கும் வித்தை தெரியாது..
கொசுவம் கட்ட தெரியாது..
குங்கும பொட்டும் கிடையாது...
தமிழினமே அவளோட உறவடா
ஜயோ தெய்வம் கூட இவளைவிட குறைவடா..
வாசல் தெளிக்க ஆசைதான் வீடு
இல்லை நண்பா!
பாசம் காட்ட மனசு உண்டு பெற்றோர் இல்லை நண்பா!
பயணம் செய்ய ஆசையுண்டு பாதை இல்லை நண்பா!
மீட்க ஈழமொன்றே உண்டு வேட்கை கொண்டால் நண்பா.."""
(பெண் போராளிகளின் குணத்தை உணர்த்தும் பாடல் வரி இது)
Share this poem :

No comments:

Post a Comment

 
Copyright © 2011. Tamil Poems - All Rights Reserved
Published by Eelanila.com